search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
    X

    காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு

    • பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    செல்ப் அறக்கட்டளை மற்றும் அரக்கோணம் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பாக ஆதிதிராவிடர் பெண்கள் மின் நிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி. பார்த்திபன், குளோ அறக்கட்டளை தலைவர் பி.ஜேம்ஸ், உடற்கல்வி ஆசிரியர் செல்வநாதன், ஆசிரியர்கள் தினேஷ், பாரதி, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா, அரக்கோணம் அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரெஜினா, காசநோய் மேற்பார்வையாளர் ஏ.தனஞ்செழியன், சுகாதாரப் பார்வையாளர்கள் எம்.உஷா மற்றும் கே.அருள் ஆகியோர் கலந்து கொண்டு செல்ப் அறக்கட்டளை தன்னார்வலர்கள் கோ.முருகேசன், நந்தினி, ப.சுஜித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×