search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
    X

    பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

    • தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜோதி (வயது 50). இவர்களுக்கு அரிகிருஷ்ணன், கணேஷ், என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் இவரது மூத்த மகன் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் ஜோதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த ஜோதி தவறி கீழே விழுந்ததில் பின் பக்க தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த அவரை உடனடியாக 108 ஆம்பூலன்ஸ் மூலம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதித்தபோது டாக்டர்கள் ஜோதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து குறித்து ஜோதியின் மகன் கணேஷ் (23) அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×