search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் வி.என். உலகநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சருமான ஆர்.காந்தி, ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம..எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    அரக்கோணம் ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர்கள் வில்சன், அன்பழகன்,கீதா, நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, செயற்குழு உறுப்பினர் கண்ணையன், தக்கோலம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவருமான எஸ்.நாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய ஒன்றிய பொருளாளர் ஜி.டில்லிபாபு நன்றி கூறினார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது43). பம்ப் ஆபரேட்டர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை ராமச்சந்திரன் உளியநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மீண்டும் மகேந்திரவாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கோடம்பாக்கம் - உளிய நல்லூர் கிராம சாலையில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம டைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பாணாவரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமச்சந்திரனை மீட்டு வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து டிரைவர் தேடி வருகின்றனர்.

    • கொடி நாள் நிதி வசூல் இலக்கை எட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
    • ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கொடிநாள் வசூல் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு நிதி வசூல் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.41 லட்சம் எட்டப்பட்டுள்ளது,

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை ஒரு வார காலத்திற்குள் எய்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூல் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் , லோகநாயகி, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஞானசேகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • 22 மூட்டைகள் சிக்கியது
    • போலீசார் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் மின்சார ரெயிலில் நேற்று இரவு அரக்கோணம் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 25 கிலோ எடை கொண்ட 22 அரிசி மூட்டைகள் இருக்கையின் அடியில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பெட்டியில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் உக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் ரேசன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    அவரை கைது செய்த போலீசார் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • சிறு, குறு தொழில் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டையிலும் நேற்று மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் சந்திரகாசன், செயலாளர் முரளி, துணைத் தலைவர் புனித வேல், பெல் அன்சிலரி அசோசியேசன் தலைவர் வாகிசன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு , சோளிங்கர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதில் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வேண்டுகோள்
    • சுற்றுசூழல் மாசடைவதால் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தாண்டு வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் உள்ள மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    தீபாவளியை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டா டுவார்கள். பட்டாசு களை வெடிப்ப தினால் சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளும் மாசடை கிறது. பொது மக்கள் பட்டாசு வெடிப்ப தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதன்படி, அரசு சார்பில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

    தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொது மக்கள் திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலமாக முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    மருத்துவமனைகள், வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிலும், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் தி.மு.க மற்றும் சுற்று சூழல் அணி சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நேற்று பாணாவரம் சந்தைமேட்டு பகுதியில் நடைப்பெற்றது.

    காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை அமைப்பாளா்கள் ராஜேஷ்,அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.மு.க காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளா் தெய்வசிகாமணி, மாவட்ட துணைசெயலாளா் துரைமஸ்தான், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர், பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் அா்ஜீனன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

    மேலும் பாணாவரம் வாரசந்தை பகுதியில் வேப்பம், பூங்கை உள்ளிட்ட 9 வகையான 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனா். இதில் திமுக காவேரிப்பாக்ம் ஒன்றிய துணை செயலாளா் சங்கா், பொருளாளா் ரவி, மாவட்ட பிரிதிநிதி பாஸ்கா், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சுமன், சாமு, பாணாவரம் ஊராட்சிமன்ற துணைதலைவர் சரண்யா, ஓய்வு பெற்ற முன்னால் தலைமை ஆசிரியை ஜெகதாம்பாள், பாணாவரம் கிளை கழக பொருப்பாளா் பாலன், ஆசிரியர் சரவணன், வார்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.

    பாணாவரம் முன்னால் ஒன்றியகுழு உறுப்பினா் சரவணன் நன்றி கூறினாா்.

    • பதிவேட்டில் இடம் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு
    • நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நடவடிக்கை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து கணக்கிட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

    மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்றம் செய்தவர்கள் குறிப்பாக சந்தேக நபர்கள், ரவுடிகள் போன்ற வர்களுக்கான சரித்த பதிவேட்டில் தற்போது 56 குற்றவாளிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.

    அதேபோல் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய குற்றவாளிகள் பதிவேட்டில் 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுடைய நடவடிக்கை என்ன, என்பது உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறியபோது பறிதாபம்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கர்கேட்டா(22), திருமணமானவர்.இவர் ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் பார்த்து அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார்.

    நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடைகள் கலைத்து பணம் உள்ளதா என தேடினார்
    • மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த அகரம் சாலை பகுதியில் விஜயராகவன் என்பவர் வீடு உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் வீட்டுக்குள் சென்றதாக கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்விஜயராகவன் வீட்டை ஆய்வு செய்தனர்.

    அதில் வெளியில் இருந்து வீட்டின் பூட்டை சுத்தியால் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் ஜன்னலை திறந்து அதன் வழியாக சிலாvப்பில் இருந்த பெட்டியை இழுத்து அதிலி ருந்த வீட்டு பத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட வைகளை கலைத்து பணம் உள்ளதா என தேடினார். மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் வெளியில் உள்ள கேட்டை உடைத்ததாகவும் அப்போது அங்கு யாரோ கூச்சலி ட்டதில் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

    அருகில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கைபையை மாட்டி கொண்டு மர்மநபர் வருவது போன்ற காட்சிகள் இருந்தது.

    தயிர் பாக்கெட்

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். மர்ம நபர் காலையில் தயிர் பாக்கெட் கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக விற்பனை செய்து வருவதாக கூறினர்.மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மற்றுத்திற னாளிகள் மற்றும் முதியோர்களின் சிரமத்தை குறைக்க ரூ.6. லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம், எம்.ஆர்.எப். நிறுவன முதுநிலை பொது மேலாளர் தீபக் மேத்யூ, பொது மேலாளர் ஜான் டேனியல் ஆகியோர் பேட்டரி வாகனத்தை வழங்கினர்.

    கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளின் வசதிக்காக அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலக வாயில் வரை அழைத்து செல்வதற்காக எம்.ஆர்.எப்.நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் எல்வின், நிறுவன சமூகப் பங்களிப்பு ஒருங்கி ணைப்பாளர் கஜேந்திரன். மனிதவள மேலாளர் பால் மற்றும் அலுவலக மேலாளர் பாபு உள்பட , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது
    • ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த வேட்டாங்குளம் பகுதியில் வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    இம்முகாமினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி நேரில் ஆய்வு செய்தார். முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×