search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என ஆலோசனை
    • 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் மாடுகள் திருடு போகிறது.

    இதை தடுக்க திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் திமிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பசு மாடுகளை தனியாக கட்டாமல் தட்டியிலே அல்லது கொட்டகையிலோ கட்டி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

    இரவில் யாரேனும் சந்தேகம் படும்படியாக நபர்களை கண்டால் 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மாடுகள் திருடு போவதை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராமங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் திமிரி போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    கலவை:

    கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மன அமைதிக்காக யோகா பயிற்சி
    • அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் செயலாக்க பயிற்சி நடைபெற்றது.

    அப்போது பாதுகாப்பான சுகாதாரமான முறையில் உணவை தயார் செய்வது குறித்தும், மன அமைதிக்காக யோகா பயிற்சி செய்வது குறித்தும், சிறுதானிய வகைகளின் முக்கியத்துவம் குறித்தும் செயலாக்க பயிற்சி வழங்கப்பட்டது. இதில் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சைபுதீன், வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இரபீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

    ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கிரண்ஸ்ருதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் நவல்பூர், கெல்லீஸ் ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ-மாணவிகள் ஊழலுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியவாறு சென்றனர்.

    இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆலோசனைகள் வழங்கப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாலாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜெயலலிதா, கவிதா, மீனா, பரிமளா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யாலட்சுமி வரவேற்றார்.

    சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் சக்தி லீலா, மகளிர் குழு தலைவி மகேஸ்வரி, இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

    நேற்று ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலம் ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி பஸ் நிலையம் தொடங்கி சிஎல் சாலை வழியாக வாரசந்தை மைதானம் வரை நடைபெற்றது.

    இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
    • பா.ம.க. நகர செயலாளர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பா.ம.க. சார்பில் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நரேஷ் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க வின் மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மாணவர் சங்க செயலாளர் வக்கீல். ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ரவி , ரஜினி சக்கரவர்த்தி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வாலாஜா அடுத்த கீழ் விஷாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது57). இவர் நேற்று காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணிப்பேட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்
    • மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் அழைத்து வர உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரம் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-

    புத்தக கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் இடம் பெற ஏதுவாக தனித்தனியாக புத்தக அரங்குகள் , தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உணவுக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின்சாரத்துறையின் சார்பாக தடையில்லாத மின்சாரம், பொதுப்ப ணித்துறையின் மூலமாக அரங்குகளில் ஒளிவிளக்கு, ஒளிப்பெருக்கி, மேடை, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி அதன் உறுதித்தன்மையினை ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஏதுவாக பஸ் வசதிகள், நாள்தோறும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சா ளர்களின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புத்தக திருவிழாவில் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை துறை அலுவ லர்கள் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும்.

    தெரியப்படுத்த வேண்டும்

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள புத்தக வாசிப்பாளர்கள், மாணவ, மாணவிகள்மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் புத்தக திருவிழா நடை பெறுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட நூலக அலுவலர் பழனி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காடு நகராட்சி தேவி நகர் பகுதியில் நகர்ப்புற சுகாதார வளாகம் கட்டிடம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு 3-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டித்தை திறந்து வைத்தார்.

    இதில் நகர மன்ற துணை தலைவர் பவளகொடி சரவணன், நகர மன்ற உறுப்பினர்கள் முனவர்பாஷா, அணு அருண், ராஜலட்சுமி துரை, தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர், ஏ.பி.ஜே அறக்கட்டளை தலைவர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த கல்விஆண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

    இதில் 8 பேருக்கு முதலாம் ஆண்டு படிப்பிற்கு தேவையான பாட புத்தகங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,விஸ்வாஸ் பள்ளியின் தலைவர் கமலா காந்தி ஆகியோர் தங்கள் சொந்த செலவில் வழங்கினர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

    • மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டையில் பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வாலாஜா மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அண்ணா தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் பெல்.தமிழரசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான முக்கூர்.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்தலுக்கான சிறப்பு முகாமில் நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வலியுறுத்தி பேசினர்.

    கூட்டத்தில் ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×