search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
    • மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூறியதாவது:-

    ஏற்கனவே செய்த பணிகளுக்கு பில் கொடுக்காததால் மற்ற பணிகள் நடைபெறாமல் உள்ளது, நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கவைப்பது அதிகாரிகளின் வேலை ஆகும். நிலுவைகளில் உள்ள பணிகள் பல இடங்களில் முடிவடைந்துள்ளன.

    அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்பட்ட பின்னர் தான் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்கபடுகிறது.அதிகாரிகளால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நிலுவையில் உள்ள பணிகளை கண்காணிப்பது எங்கள் வேலை இல்லை. ஒப்பந்ததாரர்கள் முறையாக ஜி.எஸ்.டி செலுத்தவில்லை, ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    அதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கூட்ட தீர்மானத்தின் படி அதிகாரிகள் நடக்கவேண்டும்.முடிந்த பணிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும்,தேவையற்ற காரணங்களை கூறி முடக்க கூடாது என்ற குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினர்.

    மாவட்ட கவுன்சிலர்கள் சக்தி, செல்வம், காந்திமதி உள்பட பலர் பேசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் நவ்லாக் ஊராட்சியில் சிப்காட்டில், சிப்காட் தொழில் நிறுவனத்தின் மூலம் இணைப்பு சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைப்பட்ட சாலை ஆகும்.

    இந்த சாலையை கடந்து தான் மணியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ஐ.ஒ.பி நகர், கீழ் மணியம்பட்டு மற்றும் நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட வ.ஊ.சி நகர், திருவள்ளுவர் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். சிப்காட் தொழில் நிறுவனத்திற்கு சொந்தமான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    இச்சாலை சரியில்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சிப்காட் நிறுவனம் மூலம் இச்சாலைகளை புதுப்பித்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பல பொதுத்துறை வங்கிகளில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் வங்கிக்கு வரும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

    அதனால் வங்கிகள் உள்ள இடத்தில் பொது கழிப்பிடம் அமைத்தும், இடவசதியில்லாத இடங்களில் நடமாடும் கழிவறையாவது அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட ஊராட்சி உதவியாளர் உமாபதி நன்றி கூறினார்.

    • மினி வேன் தாறுமாறாக ஓடி முட்புதரின் மீது சாய்ந்து
    • பாதுகாப்பாக அதிகாரி வாகனத்தில் அனுப்பி வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்ன ப்பன்தாங்கல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மா ணவ ர்களை ஏற்றி க்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.

    புதுப்பட்டு காலனி பகுதி அருகே வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள முட்புதரின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வளர்மதி விபத்து நடந்த இடத்தில் இறங்கினார்.

    மேலும் பள்ளி மாணவர்களை மீட்டு கலெக்டர் வளர்மதி பாதுகாப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

    • மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறினார்
    • உணவு பொருட்கள் தரம் குறித்து சோதனை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார்.

    பள்ளி மாணவ, மாணவி களுக்கு உணவினை பரிமாறி, உணவின் சுவை, சமையல் கூடத்தில் பயன்ப டுத்தப்படும் உணவு பொருட்கள் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அப்போது பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்தனர்
    • 63 குண்டுகள் முழங்கிட அரசு மரியாதை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமை தாங்கி பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவு சின்னத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் 63 குண்டுகள் முழங்கிட போலீசார் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குமார், ரவிச்சந்திரன், பிரபு, சுரேஷ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்று பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • ராணிப்பேட்டை கோர்ட் தீர்ப்பு
    • உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்

    ராணிப்பேட்டை :

    அரக்கோணம் தாலுகா, தக்கோலம் அடுத்த கணபதிபுரம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(40) முடிதிருத்தும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் காஞ்சிபுரம் அடுத்த போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த ராதா(34) என்பவருக்கும் திருமணமாகி தீபக்(7) ரூபன்(3.1/2) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இந்நிலையில் முனியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்நதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராதா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதனால் தீபக், ரூபன் ஆகிய இரண்டு பேரும் முனியப்பனுடைய தாய் மற்றும் தங்கையிடம் வளர்ந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29.06.2018 அன்று காஞ்சிபுரம் சென்ற முனியப்பன் தனது மனைவி ராதாவை தன்னுடன் வாழ அழைத்துள்ளார் .

    அதற்கு ராதா வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் மறுநாள் 30ம் தேதி அன்று கணபதிபுரத்திற்கு வந்து தனது மகன்களிடம் உங்கள் தாய் என்னுடன் வாழ வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    பின்னர் தனது இரு மகன்களையும் கிணற்றிற்கு அழைத்து சென்று இளைய மகன் ரூபனை கிணற்றில் தள்ளிவிட்டு, பின்னர் தீபக்கையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு முனியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சிறுவன் ரூபன் நீரில் மூழ்கி இறந்து விட்டான் .

    தீபக் மட்டும் உயிருடன் தப்பி வந்து நடந்த சம்பவத்தை தனது பாட்டி, அத்தை மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தான்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், முனியப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து முனியப்பன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்
    • பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை கேட்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு ஒப்பந்த முறையில் 34 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 2-ந் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே தங்களுக்கு குறித்த தேதியில் முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென கூறி நேற்று பெல் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பணிக்கு வந்த நிரந்தர ஊழியர்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நேற்று ஒன்றிய குழு தலைவர் சேஷா.வெங்கட் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம் , சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சீக்கராஜபுரம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெறும் போது முறையான தகவல்கள் தெரிவிப்ப தில்லை. இதனால் பொதுமக்கள் தொலைவில் உள்ள நவ்லாக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஒன்றிய பகுதிகளில் பணிகளுக்கு விடப்படும் டெண்டர்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தகவல்தெரியப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில்:-

    சீக்கராஜபுரம் பகுதி பொது மக்களின் கால் நடைகளுக்கு சிகிச்சை பெற வசதிக்காக ஏகாம்பரநல்லூர் கால்நடை மருத்துவமனையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியக்குழு பதவி ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

    இதில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது.

    இதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆர்.காந்திக்கும் நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என்றர்.

    கூட்டத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரக்கோணம் ரெயில் நிலைய கேமராவில் சிக்கினார்
    • ஓடும் ரெயிலில் கைவரிசை

    அரக்கோணம்:

    சென்னை புரசை வாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரில் வெள்ளி பொருட்களை வாங்கினார்.

    வெள்ளிப் பொருட்கள், பணம் திருட்டு

    பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.

    அப்போது அவர் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12.90 லட்சம் வைத்திருந்த தனது பையை தலை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். அப்போது பணம், நகை இருந்த பையை திருடி சென்றுவிட்டனர்.

    இந்த ரெயில் மறுநாள் அதிகாலை அரக்கோணத்தைக் கடந்து பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது சதீஷ்குமார் தூக்கத்திலிருந்து விழிந்து பார்த்த போது தான் வைத்திருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

    இது குறித்து சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    தனிப்படை விசாரணை

    இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க ரெயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.பி செந்தில்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவும் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் ஒரு குழு என 2 குழு அமைக்கப்பட்டு திருடியவர்களை தேடி வந்தனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    இதில் சதீஷ்குமாரின் பையை மர்ம நபர் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் அந்த திருடனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டவர் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன் என்பதும் , ஆகஸ்டு 30-ந் தேதி அதிகாலையில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு அந்த ெரயில் வந்த போது சதீஷ்குமார் பயணித்த பெட்டியில் ஏறி பேசின் பிரிட்ஜ் வருவதற்குள் பையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதும் தெரியவந்தது.

    உடனடியாக தனிப்படை போலீசார் ஜெகனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் ஜெகன் வெள்ளிப் பொருள்களையும் ரூ.12.90 லடசத்தையும் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர்.

    தனிப்படை போலீசாரை ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க ரெயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவிட்டார்.
    • அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    அரக்கோணம்:

    சென்னை புரசை வாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரில் வெள்ளி பொருட்களை வாங்கினார்.

    பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.

    அப்போது அவர் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12.90 லட்சம் வைத்திருந்த தனது பையை தலை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். அப்போது பணம், நகை இருந்த பையை திருடி சென்றுவிட்டனர்.

    இந்த ரெயில் மறுநாள் அதிகாலை அரக்கோணத்தைக் கடந்து பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது சதீஷ்குமார் தூக்கத்திலிருந்து விழித்து பார்த்த போது தான் வைத்திருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

    இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க ரெயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.பி செந்தில்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    ரெயில்வே பாதுகாப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவும் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் ஒரு குழு என 2 குழு அமைக்கப்பட்டு திருடியவர்களை தேடி வந்தனர்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    இதில் சதீஷ்குமாரின் பையை மர்மநபர் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இதன் அடிப்படையில் அந்த திருடனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டவர் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன் என்பதும் , ஆகஸ்டு 30-ந்தேதி அதிகாலையில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்த போது சதீஷ்குமார் பயணித்த பெட்டியில் ஏறி பேசின் பிரிட்ஜ் வருவதற்குள் பையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதும் தெரியவந்தது.

    உடனடியாக தனிப்படை போலீசார் ஜெகனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் ஜெகன் வெள்ளிப் பொருள்களையும் ரூ.12.90 லட்சத்தையும் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர்.

    தனிப்படை போலீசாரை ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஸ்ரீதேவி மற்றும் சிந்து ஆகிய 2 திரையரங்கில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

    இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்படுவதை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட. ரசிகர்கள் தியேட்டரின் முன்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்.

    விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் காந்தி ராஜ் முன்னிலையில் விஜய் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பூமாலை தூவி கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டக் கோட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள், மகளிர் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் மாவட்டம் முழுவதிலும் மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பும் வகையில் மின்னனு காணொளி வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து, ஊர்வலத்தையும், வாகன பிரச்சாரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் குமரவேல், துணை நில நீர் வல்லுநர் மணிமேகலை, உதவி பொறியாளர் ஜெ யப்பிரியா, உதவி கணக்கு அலுவலர் நடராஜன் மற்றும் பொதுமக்கள், மகளிர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    திமிரி ஒன்றியம் கே.பி.ஜே மஹாலில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு ஆற்காடு சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 200 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம் பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் எஸ்.அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சி.தன்ராஜ், பேரூராட்சித் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத் தலைவர் கௌரி தாமோதரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பாரதி, அம்சப்பிரியா, கிரிஜா தேவி மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×