search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீஸ் விசாரணை

    அரக்கோணம்,

    அரக்கோணம் அருகே கிழவனம், கெடவாரி கண்டிகை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெட்டைகுளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு லாரி நின்றிருந்தது. லாரி அருகே போலீசார் சென்றபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த

    போது அரசு அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் வசூல்
    • போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அரக்கோணம் கிளை அலுவலக ஆய்வாளர் செங்குட்டுவேல் ஆகியோர் ராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாஜா, ஆற்காடு ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் 243 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாதது, அனுமதி சீட்டு இல்லாதது, வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி வந்தது என 25 வாகனங்கள் மீது ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராணிப்பேட்டை வட்டார போக்கு வரத்து அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் சாலை போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கலெக்டர் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    இதில், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயாமுரளி, வாலாஜா அரசு தலைமை மருத்து வமனையின் முதன்மை மருத்துவர் உஷாநந்தினி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் கைது செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று பஜார் பகுதி, காந்தி ரோடு, ரெயில் நிலையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மணியக்கார தெருவில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த மூதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 46), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வனத்தையன் (40) என்பதும், சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விளக்கம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி அலுவ லக கூட்ட அரங்கில் குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார் பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.

    நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திரும ணம், குழந்தை கடத்தல், குழந் தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும், இது போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, நக ராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன், குழந்தை வளர்ச்சிதிட்ட அலு வலர் அம்ச பிரியா, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் சதீஷ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் நாகப்பன் பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
    • அப்பகுதி மக்கள் மீட்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் திடீரென பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக டிரைவர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து உள்ளே இருந்த பயணிகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து சாய்ந்து நின்ற சுற்றுலா பஸ்சை கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    மேலும் இது குறித்து விசாரித்த போது சுற்றுலா பஸ்சில் பயணம் செய்தவர்கள் சிவகாசியை சேர்ந்தவர் என்பதும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அரக்கோணம் வழியாக சென்னைக்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    இதனால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • கிராமத்தை நிராகரிக்கப்பதாக குற்றச்சாட்டு

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், சுரேஷ் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அன்வதிர்க்காண் பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குமார்:-

    என்னுடைய ஊராட்சியில் எந்த ஒரு பணிகளையும் சரிவர நிறைவேற்றுவதில்லை. மேலும் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சியை நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    கூட்டத்தில் தாராதகேஸ்வரி, பாலன், நாராயணசாமி, கருணாநிதி, குமார், நரேஷ், கோமதி, ஆஷா, வளர்மதி, சுந்தரமூர்த்தி, ரேவதி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கவுன்சிலர் கோமதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோமதி வெளிநடப்பு செய்தார்.

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
    • அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை, மாலை 2 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் சாலையில் உள்ள முத்துக்கடை எஸ்.கே. மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.

    ராணிப்பேட்டையில் நடைபெறும் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    • நச்சு புகையால் பொதுமக்கள் அவதி
    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த தென்கடப்ப ந்தாங்கலிலிருந்து முசிறி செல்லும் சாலையில் கடந்த சில வருடங்களாக தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    தோல் தொழிற்சாலை, பேப்பர் தொழிற்சாலை ஆகியவற்றில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இந்த பாலி அலுமினியம் குளோரைடு ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதனை ராணிப்பேட்டையை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் கழிவு நீரை சுத்தம் செய்வதற்கு இங்கிருந்து கேன்களில் அனுப்பப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள 12 பெரிய அளவிலான பிளாஸ்டிக்டேங்குகளில் ரசாயனம் தேக்கி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரசாயணம் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டேங்க் திடீரென உடைப்பு ஏற்பட்டு ரசாயனம் கசிந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த வர்களுக்கு மூச்சுத் திணறல் ,கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டது மேலும் ரசாயனம் வெளியே றியதால் அப் பகுதியை சுற்றி பனிமூட்டம் போல் வென் புகை காணப்பட்டது.

    காவலாளி ஒருவருக்கு மட்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுபற்றி ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து டேங்கில் தண்ணீர் பாய்ச்சி அடித்தனர்.

    ரசாயனம் அருகில் முசிறி கிராம சாலையில் சென்றதால் அந்த வழியாக சென்றவ ர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயனத்தின் வீரியத்தை குறைக்க அதன் மீது மண் கொட்டி மூடப்பட்டது. சம்பவ இடத்தை வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். ரசாயனம் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை, இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோ சட்டம், குழந்தை திருமணம் ஆகியவை குறித்தும் ஆலோசனை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி காவேரிப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் போலீசார் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்ததில் போதைபொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்தும், பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

    மேலும் போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கினர்.

    இதைபோல அவளூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சப்தகிரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் அருள்மொழி பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போதைபொருட்கள் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் வளர்மதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் இன்றைய கணினி உலகில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகள் அடங்கிய சிறப்பு செயலிகள் நீட், ஜே.இ.இ பாடங்கள் அடங்கிய மற்றும் இணைய வசதிகளுடன் உள்ள கையடக்க கணினி சமூக பங்களிப்பு நிதியில் வழங்கிட கலெக்டர் வளர்மதி நடவடிக்கை எடுத்தார்.

    அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அதிகம் பெற்ற 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜி அப்துல்மஹித் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்தது
    • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    சேலத்தில் வருகிற டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகன பிரசார ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வந்த பிரசார ஊர்வலத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வரவேற்று, ஊர்வலத்தில் கலந்து கொண்டு வி.சி.மோட்டூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க.வின் சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். எம்.எல்.ஏ., மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், துணை அமைப்பாளர் சிவா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட தி.மு.க. வின் மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×