search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
    • பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைய உள்ளது.

    இந்த கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு கட்டிடத்தில் ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய தொகுதிகளின்வாக்கு எண்ணிக்கையும், புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் ஆற்காடு, அரக்கோணம், காட்பாடி ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கட்டிடங்களில் உள்ள அறைகளில் வாக்குகளை எண்ணும் அறைகளும், வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட உள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகனங்கள் வந்து செல்வதற்கான நுழைவா யில்களையும், அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
    • கோட்ட செயற்பொறியாளர்தகவல் தெரிவித்துள்ளார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி, எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரி குப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகலில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்கத்தில் திருத்தணி -பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத நபர்கள் அலுமினிய ஒயர்களை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைப்பதாக அரக்கோணம்ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அந்தப்பகுதிகளில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியை அடுத்த பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் அலுமினிய ஒயரை வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 200-க்கும் மேற்பட்டோருக்கு பால், பழம், பிரட், மதிய உணவு வழங்கப்பட்டது
    • ெரயில்வே பொது மருத்துவமனையில் நடந்தது

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருங்கிணைப்பாளர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கே.நரேஷ் குமார் தலைமையில், அரக்கோணம் நகர காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் அ.எட்வின் ராஜ் முன்னிலையில் உள்புற நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு பால், பழம், பிரட், மதிய உணவு வழங்கினர். மற்றும் ெரயில்வே பொது மருத்துவமனையில் அன்னதானம் வழங்கினர்.

    அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் மற்றும் டோமினிக், லட்சுமிபதி, டேவிட், திலீப், துளசி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் கௌரிசங்கர் நன்றி கூறினார்.

    • ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்து உள்ள அரசு பொது மருத்துவ மனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய தலைவர் நிர்மலா சௌந்தர் தலைமையில் மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலையில் நடந்தது.

    அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமன், அரசு மருத்துவர் சிந்துஜா,ஒன்றிய பொருளாளர் டில்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் வில்சன், சுகாதார ஆய்வாளர் செந்தில், கழக நிர்வாகிகள் ஜான், வெங்கடேசன், ஹேம்நாத், செவிலியர்கள் ஹேமாவதி, சபியா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கூட்டுறவு துறையின் மூலம் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 5 ஆயிரத்து 47 பேருக்கு ரூ. 34கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 40 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) முருகேசன் திட்ட விளக்கயுரை யாற்றினார்.

    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சிவமணி கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அனிதா குப்புசாமி, நகரமன்றத் தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • அய்யப்ப சேவா சமாஜம் மூலம் நடந்தது
    • 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை , சிப்காட்டில் வேலூர் மண்டல அய்யப்ப சேவா சமாஜத்தின் மூலம் சபரிமலைக்கு உணவுக்கான மளிகை பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இது குறித்து சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி ஜெயசந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்கு காலங்களில் சன்னிதானத்தில் சேவை பணிக்காக அய்யப்ப சேவா சமாஜத்தின் சேவகர்கள் சேவை பணிக்காக சன்னிதானத்தில் தினமும் குறைந்தது 250 சேவகர்கள் வீதம் 65 நாட்களுக்கும் சேவையாற்ற உள்ளனர்.

    இதன்படி சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் விநியோகம் செய்தல், சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க சேவை பணியாற்றுதல், ஸ்ட்ரெச்சர் சர்வீஸ் போன்ற எண்ணற்ற சேவை பணிகளை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இவ்வாறு சேவைக்காக வருகின்ற 250 க்கு மேற்பட்ட சேவகர்களுக்கும் 3 வேலையும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 750 க்கும் மேற்பட்ட சேவகர்களுக்கு 65 நாட்களும் சுமார் 50,000 நபர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பினையும் வட தமிழகம் ஏற்றுள்ளது.இதற்கான உணவு,மளிகை பொருட்களை சென்னை மண்டலம், வேலூர் மண்டலம், சேலம் மண்டலம், கடலூர் மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலங்களில் இருந்தும் சபரிமலைக்கு மளிகை பொருட்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டலம் சார்பில் இன்று (நேற்று)அனுப்பபடுகிறது.

    சன்னிதானத்தில் மூலிகைகுடிநீர் விநியோகம் செய்வதற்காக வேலூர் மாவட்ட தலைவர் நித்தியானந்தம், ரமேஷ் மற்றும் சஞ்சய் ஆகியோரின் கூட்டு முயற்சியால் தண்ணீர் எடுத்து செல்லும் 3 டிராலிகளையும் வேலூர் மாவட்டத்தின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் மண்டலம் சார்பில், உணவு, மளிகை பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழ்நாடு மாநில தலைவர் குருசாமி. ஜெயசந்திரன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் நிர்வாகிகள்பலர் உடனிருந்தனர்.

    • வாலாஜா அரசு மருத்து வமனையில் பிரேத பரிசோதனை
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை: 

    வாலாஜா சுவர்ண செட்டி தெருவை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 45) இவர் வாலாஜாவில் சூப்பர் மார்க்கெட் உள்பட பல்வேறு தொழில்கள், வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அமர்நாத் தனது கடையில் உள்ள அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக வாலாஜா அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட அமர்நாத்திற்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    • ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசாருக்கு உத்தரவு
    • கைப்பற்றப்பட்ட வாகனங்களை விரைவில் அப்புறப்படுத்த அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை பிரிவில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்துவதை தடுக்கவும், ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், மாநிலம் மற்றும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் அரிசி கடத்தலை தடுக்க சோதனைகளையும்,ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை அரசுக்கு பறிப்பிழக்கம் செய்து விரைவில் அப்புறப்ப டுத்தவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு வேலூர் சரக டி.எஸ்.பி நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசனின் தாய் செல்வி(55) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளவரசனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை பாலாற்றில் புதைத்ததாக, 4 பேர் வாலாஜா போலீசில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன் (24) , வாசுதேவன் (27), அருண்குமார் (33), ஆகியோர் நண்பர்கள்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த மயிலாறு திருவிழாவின்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த இளவரசனை, 4 பேரும் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இளவரசன் தலையில் அடித்தனர். உடைந்த பீர் பாட்டிலால் வயிறு மற்றும் பல இடங்களில் குத்தியும் கொலை செய்தனர்.

    மேலும் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காணாமல் போன இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    முழுமையாக விசாரணை நடத்திய பிறகே கொலை செய்ததற்கான காரணம் தெரியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸரய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    பாலாற்றில் இளவரசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தி யாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப் பேட்டை, பிஞ்சி, அல்லி குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் ஆர்.குமரேசன் தெரிவித்துள்ளார்.

    • 10 பேர் காயம்
    • போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர்

    ராணிப்பேட்டை:

    சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் சென்றது.

    அப்போது வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். டிரைவர் பஸ்சை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சித்தார்.

    இருப்பினும் பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் எஞ்சின் பாகங்கள் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×