என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் கிருஷ்ணர் ரதத்திற்கு வரவேற்பு
- அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது.
- பக்தர்களுக்கு பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
நெல்லையில் உள்ள அகில பாரத கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பவனி வரும் கிருஷ்ணர் ரதம் உடன்குடி வந்தது. உடன்குடி பஜார், கொட்டங்காடு, சந்தையடியூர் உள்ளிட்ட பகுதிகளில் பவனி வந்த ரதத்திற்கு இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில செயலர் பாலன், தொழிலதிபர் மகேந்திரன், பா.ஜ.க. தொழிற்சங்க நிர்வாகி அப்பாத்துரை ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உலக நாடுகளில் போர் பதட்டம் இன்றி அமைதி நிலவவும், நாட்டில் நன்கு மழை பெய்து விவசாயம், தொழில்வளம், வியாபாரம் பெருகவும் வேண்டி சிறப்பு பஜனைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் பகவத் கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் வழங்கப்பட்டது. பரமன்குறிச்சியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், சேவா பாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்