search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அதிகாரிகளிடம் அளிக்கும் கோரிக்கை  மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    அதிகாரிகளிடம் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • தருமபுரி அருகே அதிகாரிகளிடம் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
    • அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரி விப்பதில்லை.

    தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ வில்சன் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய விவசாயிகள் அதிகாரி களிடம் பல்வேறு கோரிக்கை கள் குறித்து மனுக்கள் அளித்தால் நடவடிக்கை எடுபபதில்லை என்று தங்களது கோரிக்கையை விரிவாக தெரிவித்தனர். அரூர் உட்கோட்ட பகுதி களில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

    அதனால் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படு வதாகவும், மத்திய மாநில அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இவ்வகையான நலத்திட்டங்கள் குறித்தும், மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரி விப்பதில்லை. மேலும் அனைத்து துறை அலுவலர்களும் மெத்தனப் போக்கில் செயல்ப டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுச்சூ ழலை மாசு படுத்தும் தனியார் கிழங்கு மில் மீது 20 வருட காலமாக புகார் கொடுக்கபட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இது குறித்து எந்த விதமான பதிலும் வழங்கவில்லை என்றும், மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரி விப்பதில் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் திட்டத்தில் பயன் இல்லாமல் போவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து அரசு அலுவ லர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    ஈச்சம்பாடி அணைக்க ட்டில் இருந்து தண்ணீர் விடப்பட்டு ஒரு மாத காலமாகிவிட்டது. ஆனால் தற்போது வரை கடை மடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மனுக்கள் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதில் மொரப்பூர் வட்டார வளர்ச்சித்துறை மெத்தன போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினர்.

    அதே போன்று ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து பம்பு வழியாக நீரேற்றும் முறையை பயன்படுத்தி ஏரி , குளங்களுக்கு நீர் நிரப்ப கடந்த ஆண்டில் ரூ.410 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ப்பட்டும் தற்போது வரை அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள வில்லை என்றால் விவ சாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்து வதாகவும் விவசாயிகள் குறைத்து கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தனர்.

    மேலும் அரூர் பாப்பி ரெட்டிப்பட்டி பகுதி களில் நெல் கொள்முதல் நிலையம், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் கொடுத்தும் மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை என்றனர்.

    Next Story
    ×