search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை- பணம் கொள்ளை
    X

    பொள்ளாச்சியில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை- பணம் கொள்ளை

    • வேலைக்கார பெண் ஆப்பிள் ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்
    • நகை மற்றும் பணம் கொள்ளை போனது

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 63). பூ வியாபாரி.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு 35 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் காலை மற்றும் மாலை வேலைகளில் அடிக்கடி வந்து முத்துலட்சுமிக்கு உதவி செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த இளம்பெண் ஆப்பில் ஜூசில் மயக்க மருந்தை கலந்து முத்துலட்சுமிக்கு கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    பின்னர் அந்த பெண் அவரது வீட்டை திறந்து வீட்டில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    மயக்கம் தெளிந்து எழுந்த முத்துலட்சுமி இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயக்க மருந்து கலந்து கொண்டு மூதாட்டியின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×