என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டியல் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்
- 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
குன்னூர்,
தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்துள்ளது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்து வத்ைத கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படு த்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
குன்னூர் பகுதியில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.
கூடலூர் நகராட்சி ஆணையாளர் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, பந்தலூர், கோத்தகிரி வட்டத்தில் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அதனை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.17,500 அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக கடைகளிடம் இருந்து ரூ.21,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்