என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குன்னூரில் பணிகள் நடந்ததாக கூறி ரூ.3 லட்சம் மோசடி?
- குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
- குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
குன்னூர்,
குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் வாஷிம் ராஜா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகநாதன் உள்பட நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி பேசுகையில், அதிகாரிகள் மன்றத்தில் பொய்யான தகவல்களை அளிக்க வேண்டாம். என்ன நடந்ததோ அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.
அடுத்தபடியாக நகராட்சி கமிஷனர் ஏகநாதன் பேசும் போது, தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளும் சென்று பணிகளை சரிவர செய்ய வேண்டும்.
இதனை நகர சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திமுக நகர மன்ற உறுப்பினார் ஜெகநாதன் பேசும் போது, வண்ணார் பேட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பணிகள் எதுவும் செய்யாமல், வேலை நடந்ததாக கூறி ரூ. 3 லட்சத்துக்கான தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அடுத்த படியாக தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் பேசும்போது, சிங்கார பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 கடைகள் கட்டப்பட்டு உள்ளது.
அதற்கு நகராட்சி அனுமதி அளித்து உள்ளதா, அதற்கான வரி வசூலிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்