என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் பைனான்சியரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி: தந்தை-மகன் கைது
- ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
- இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (வயது22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65) மற்றும் அவரது மகன் விவேக் (35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.
அதனை மீட்க பணம் வேண்டும் என கேட்டனர். சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு அவர்களின் நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து விசு அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரியவந்தது. ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்