என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம்
- நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.
- ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
தமிழ்நாட்டில் நேற்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில்,பாகலூர் ஹட்கோ பகுதியில் இருந்து அணிவகுப்பு தொடங்கி,பாகலூர் சாலை, பஸ் நிலைய சாலை, பழைய பெங்களூரு சாலை, எம்.ஜி.சாலை, ஏரித்தெரு, மற்றும் ராமநாயக்கன்ஏரி வழியாக சென்று கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் பேரணி நிறைவு பெற்றது. வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
பின்னர், நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சிவண்ணா தலைமை தாங்கினார்.ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் சங்கர்லால் முன்னிலை வகித்தார்.
அகில பாரத துறவியர் சங்கத்தின் துணைத்தலைவர் ராமானந்தா சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார். வட தமிழக ஆர்.எஸ் எஸ்.மாநில இணைசெயலாளர் பிஷோப குமார் சிறப்புரையாற்றினார்.
இதில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ் எஸ்.தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி,
ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்