search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி
    X

    தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. 

    தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணி

    • குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர் தூவி, குங்குமமிட்டு மரியாதை செலுத்தபட்டது.
    • ஊர்காவல் படையினர் என 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தருமபுரி,

    நீதிமன்ற உத்தரவை யடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 45 இடங்களில் ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து தருமபுரியில் நேற்று ஆர்.எஸ்.எஸ்.அணிவகுப்பு பேரணி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பழனி தலைமையில் குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மலர் தூவி, குங்குமமிட்டு மரியாதை செலுத்தபட்டது.

    அதனை தொடர்ந்து 4 ரோடு சந்திப்பு, நகர பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் வாரியார் திடலில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 200 -க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்துள்ளது. குறிப்பாக பேரணியின் போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது.

    நாட்டின் இறையாண்மை க்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கபட்டது.

    அதனையடுத்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 17 ஆய்வாளர்கள், ஊர்காவல் படையினர் என 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×