search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
    X

    சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

    • தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு லைன்மேடு, வேலு புதுத் தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஜபர்லால் (வயது 19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.500 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×