search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணை மருத்துவ படிப்பு; 66,693 பேர் விண்ணப்பம்
    X

    துணை மருத்துவ படிப்பு; 66,693 பேர் விண்ணப்பம்

    • தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது.
    • மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்களுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் உள்ள பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடை பெற உள்ளது. மொத்தம் உள்ள 13000-க்கும் மேற்பட்ட துணை மருத்துவ இடங்க ளுக்கு 66,696 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ள னர். விண்ணப்பங்கள் அனைத்தும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தர வரிசை பட்டியல் வெளி யிட்டு, விரைவில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி இயக்க கம் முடிவு செய்துள்ளது.

    தரவரிசை பட்டியல்

    மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதி காரிகள் கூறுகையில், எம்.பி.பி.எஸ்- பி.டி.எஸ் படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வருகிற 16-ந்தேதி வெளியிடப்பட்டு, அடுத்த நாள் முதல் கவுன்சிலிங் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் துணை மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளி யிடுவதற்கான நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

    Next Story
    ×