search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
    X

    சேலத்தில் மயங்கி கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

    • சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம்:

    சேலம் ஏ.வி.ஆர். கல்யாண மண்டபம் எதிரில் உள்ள ஓட்டல் அருகே கடந்த 19-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர், கடந்த 22-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நரசிம்மன் மகன் பழனிசாமி (வயது 65) என்பது தெரிய வந்தது. எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது தெரியவில்லை.

    இவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×