search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம்  சாமிநாதபுரம் ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா
    X

    சேலம் சாமிநாதபுரம் ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா

    • கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 14-ந் தேதி மகா கணபதி பூஜை செய்து கம்பம் நடுதல், கங்கணம் கட்டுதல், முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, நாளை முதல் 3 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி, நாளை மாலை 7 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30-ந் ேததி காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் ெபாங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு திருமஞ்சன திருவீதி உலா, பூங்கரகம், அக்னி கரகம், சக்தி கரகம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு மேல், விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு கும்ப பூஜை செய்யப்பட்டு, இசக்கி அம்மன் குழந்தையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    மே 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு இளந்தென்றல் நண்பர்கள் குழு சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×