search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மரக்கன்றுகள் நடும் விழா
    X

    மரக்கன்றுகள் நடும் விழா

    • ,பலா,நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,நவலை ஊராட்சி சமத்துவபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி அழகரசு தலைமை வகித்தார்.

    மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பி.வி.ரவிச்சந்திரன்,உதவி பொறியாளர் டி.அன்பழகன்,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் இன்பசேகரன்,நவலை ஒன்றிக்குழு உறுப்பினர் சசிகுமார்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேவி சங்கர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னில வகித்தனர்.

    ஊராட்சி செயலாளர் கணேசன் மூர்த்தி வரவேற்று பேசினார் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மரியம் ரெஜினா,மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெரியார் நினைவு புரத்தில் தென்னை,பலா,நாவல் உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பெரியார் திடலில் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.இவ் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்கள்,நவலை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெ.மல்லிகா ஜெயகாந்தன்,டி.சக்திவேல்,பி.காயத்ரி பாரத்,கே.வாணி ஸ்ரீ கேசவன்,எஸ்.வனிதா பரமசிவம்,டி.கணேசமூர்த்தி,சி.ருக்மணி சொக்கன்,சி.சுதாகர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×