search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஒருங்கிணையும் நேரம் நெருங்கிவிட்டது: சசிகலா பேட்டி
    X

    அ.தி.மு.க. ஒருங்கிணையும் நேரம் நெருங்கிவிட்டது: சசிகலா பேட்டி

    • கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல.
    • தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை

    சென்னை :

    பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். இப்போதும் சொல்கிறேன். இப்போது மிகவும் பக்கத்தில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அது அ.தி.மு.க.விற்கு நல்லது இல்லை தற்போது, அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அ.தி.மு.க. என்பது என்ன? என்பதை நாம் முழுமையாக புரிந்து கொண்டால், நாம் பிற கட்சிகளை நாடும் செயல்பாடுகள் நடக்காது.

    கடலுக்குள் போய் பேனா நினைவு சின்னம் அமைப்பது நல்லது அல்ல. இது மீனவர்களை பாதிக்கும், காவல்துறைக்கும் சவாலாக இருக்கும். அவர்களுக்கு (தி.மு.க.வினருக்கு) ஆசை இருந்தால் கருணாநிதி சமாதி அருகேயே நினைவு சின்னம் அமைக்கலாம். அதற்கு இத்தனை அடிகளில்தான் வைக்க வேண்டும் என்று இல்லை. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு நிதி இல்லை என்று கூறும்போது, பேனா வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுதான் என் கேள்வி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×