search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சீர்மரபினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    சீர்மரபினர் இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    • சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்விதி ட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமென்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவி த்தொகை இணையதளம் செயல்படுகிறது.

    புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதே போல் புதிய இனங்களுக்கு இணையதள 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.

    அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm//scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும்விண்ண ப்பபடிவங்கள் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×