என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
- தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சச்சின் (வயது13). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் சிறுவன் தாயுடன் தனியாக வசித்து வந்தனர். சச்சின் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சச்சின் நேற்று காலை தனது நண்பர்களுடன் அதேபகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அங்கு கிணற்றில் படிக்கட்டில் நின்று குளித்து கொண்டிருந்தபோது திடீரென்று சிறுவன் ஆழத்திற்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து அவருடன் நண்பர்கள் உடனே சச்சினின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்