என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புத்தக திருவிழாவை ஆர்வமுடன் கண்டு ரசித்த பள்ளி மாணவர்கள்
- குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
- மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தென்காசி:
குற்றாலத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கிய சாரல் திருவிழாவில் தோட்டக்கலை துறை சார்பில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்துகண்டு ரசித்தனர்.
குற்றாலத்தில் சாரல் திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து பராசக்தி கல்லூரியில் புத்தக திருவிழாவை நடத்தி வருகிறது.
காண வரும் மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவில் ரூ.ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு கூப்பன் வழங்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் ரூ.7 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்