என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் வேகத்தடை தெரியாமல் கீழே விழுந்து பள்ளி மாணவி படுகாயம்
- சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
வடவள்ளி,
கோவை கனுவாய் சாலை, இடையர்பாளையம் மற்றும் வேலாண்டிபாளையம் ஆகிய பகுதி வழியாக தார் சாலையில் பில்லூர் 3 என்ற திட்டத்தின் கீழ் சாலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. வேலாண்டிபாளையம், புளியமரம், திலகர், கோவில் மேடு உள்ளிட்ட பகுதி வழியில் வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் திலகர் வீதி பள்ளி அருகே அருண்குமார் என்பவர் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் விட சென்று உள்ளார். அப்போது திலகர் நகர் பகுதியில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவரது மகள் படுகாயம் அடைந்தார். இதனைபார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தந்தை-மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுவதாவது:- இந்த பகுதியில் வேகத்தடை இருப்பது சரியாக தெரிவதில்லை. வெள்ளை பெயிண்ட் அடிக்காததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்தப் பாதையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. பல முறை வார்டு உறுப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி இப்பகுதியில் மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்