search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
    X

    கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    • தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்டிபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி பிரசாத் தலைமையிலான அதிகாரிகள் குழு தாரமங்கலம் அருகே புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் லாரியில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது பற்றி டிரைவரிடம் விசாரிக்க முயன்ற போது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வண்டியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×