என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மளிகை கடையில் திருடியவர் கைது
- நடுக்கடை கடைத்தெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பள்ளிவாசல் தெருவில் பாஸ்கரன் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்கக் கோரி புகார் ஒன்று அளித்து இருந்தார்.
புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நடுக்கடை கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆலத்தூர் மேலத்தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பதும் இவர் நேற்று முதல் நாள் இரவு மளிகை கடையில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் பணம் மற்றும் 2000 மதிப்பிலான மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
உடனே திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்