search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்த கடைகளுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமி
    X

    அடுத்தடுத்த கடைகளுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமி

    • கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த அத்தாணி-சத்தியமங்கலம் சாலை கள்ளிப்பட்டி பகுதியில் சாலையோரம் பல வணிக கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.

    இந்நிலையில் சாலையோரத்தில் உள்ள உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்றனர். அப்போது 2 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது டேபிள் டிராயரில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கோமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பூட்டி இருந்த உரக்கடை மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகளுக்கு டிப்டாப் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் வந்தது பதிவாகி இருந்தது. அந்த மர்ம நபர் தன் முகத்தை மறைக்கவோ, முகமூடி அணியவோ இல்லை. அக்கம் பக்கம் பார்த்து நோட்டமிட்டவாறே கடைகளில் அமர்ந்து அடுத்தடுத்து உள்ள 2 கடையின் சட்டர்களையும் இரும்பு கம்பி கொண்டு நெம்பி 2 கடைகளுக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்றது சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி உள்ளது.

    இந்த காட்சி தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் பிடித்து கைது செய்வதோடு, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×