search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
    X

    கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள்

    பல்லடத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

    • புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பல்லடம்,

    தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆங்காங்கே புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில், பல்லடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பையன், தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர்கள் பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும், பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு தலா ரூ.100 விதம் 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை சீல் வைப்பது, மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Next Story
    ×