search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 331 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் தீர்வாணையம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஜமாபந்தியில் மானாமதுரை வருவாய் கிராமங்களான செய்களத்தூர், காட்டூரணி, மானம்பாக்கி, மாங்குளம், கே.கே.பள்ளம், மேலப்பிடாவூர், வடக்கு சந்தனூர், எஸ்.காரைக்குடி, சூரக்குளம், எழுநூற்றி மங்கலம், மேலநெட்டூர், ஆலங்குளம் ஆகிய பகுதி களிலுள்ள பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு- இறப்பு சான்றி தழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

    பின்னர் செய்களத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் 56 பயனாளிகளுக்கு கலெக்டர் பட்டாக் களுக்கான ஆணைகளை வழங்கினார்.

    சிவகங்கை வட்டத்தில் 41 மனுக்களும், திருப்பத்தூர் வட்டத்தில் 22 மனுக்களும், காளையார்கோவில் வட்டத்தில் 21 மனுக்களும், காரைக்குடி வட்டத்தில் 18 மனுக்களும், தேவகோட்டை வட்டத்தில் 32 மனுக்களும், திருப்புவனம் வட்டத்தில் 102 மனுக்களும், மானா மதுரை வட்டத்தில் 22 மனுக்களும், இளையான்குடி வட்டத்தில் 24 மனுக்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 49 கள ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு வாரகாலத்திற்குள் அனைத்து மனுதாரர்களின் மனுக்கள் மீது தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் ஆஷா அஜீத் அலுவ லர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை, பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்து வட்டங்களிலும், சம்பந்தப்பட்ட தாசில் தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×