என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கார்-ஆட்டோ மோதல்; 2 பேர் பலி
- கார்-ஆட்டோ மோதலில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.
- காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தென்றல் நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது54). இவரது மனைவி ஜான்சி ராணி (46). இவர்களுக்கு ஜோஸ்னா என்ற மகளும், 1 1/2 வயதில் ஸ்டெபி என்ற பேத்தியும் உள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தைசாமி தனது மனைவி, மகள், பேத்தி, உறவினர் கமலா ஆகியோருடன் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டி ருந்தார். காளையார் கோவில் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஜான்சி ராணி, குழந்தை ஸ்டெபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். குழந்தைசாமி, ஜோஸ்னா, ஆட்டோ டிரைவர் சிவாஜி ஆகியோர் படுகாயங்களுடன் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக காளையார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த விஜயராணி (53) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்