search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு
    X

    வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு

    • வீட்டில் திருடியதாக 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜன். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சங்கீதா குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவர் கணவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டை காலி செய்யுமாறு முத்துராஜன், மனைவியுடன் கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து முத்துராஜன் மற்றும் 3 பேர் சம்பவத்தன்று சங்கீதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீட்டை சேதப்படுத்தி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்ப ட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பால சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×