search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    • ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • நகர செயலாளர் ஏ.இப்ராம்சா அனைவரையும் வரவேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காந்தி சிலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமை யில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    முன்னதாக நகர செயலாளர் ஏ.இப்ராம்சா அனைவரையும் வரவே ற்றார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், ஒன்றிய செயலாளர்கள் கல்லல் ஜெ.குணசேகரன், லெ.சிவ மணி, மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அழகர்சாமி, வழக்கறிஞர் ராஜசேகர், மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு இணை செயலாளர்கள் ஷபா ராஜாமுகமது, இப்ராம்சா, ஆசிப் இக்பால், பேரூராட்சி கவுன்சிலர் சையது முகமது ராபின் மற்றும் மாவட்ட, ஒன்றிய பேரூர், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×