search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வட்டபேருந்து இயக்க வேண்டும்
    X

    மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலெக்டரை கவுரவித்து பொன்னாடை அணிவித்தனர்.

    வட்டபேருந்து இயக்க வேண்டும்

    • இளையான்குடி-சிவகங்கை இடையே வட்டபேருந்து இயக்க வேண்டும்.
    • மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைத்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் சைபுல்லா, நிர்வாகிகள் கலெக்டர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்ப தாவது:-

    இளையான்குடி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் பெயரை மீண்டும் தென்மலைக்கான் காதர்ஷாப் பொன்னம்பாள் பீவி பெண்கள் பள்ளி என மாற்ற வேண்டும்.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குப்பை இடங்களை மாற்ற வேண்டும். இளையான்குடி பேரூராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட தெருக்களுக்கு பெயர்கள் சூட்ட வேண்டும். 5. சிவகங்கை, காளை யார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி, மானாமதுரை திருப்புவனம் ஆகிய ஊர்களுக்கு வட்டப்பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 6. இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள தெய்வ புஷ்பா ஊரணியை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை நகர செயலாளர் அல்லா பிச்சை, காரைக்குடி நகர செயலாளர் சாகுல் ஹமீது, இளையான்குடி நகர பொருளாளர் கான்சா உஸ்மான், நகர துணைச் செயலாளர் ஆட்டோ அபுபக்கர், தகவல் தொழில் நுட்ப அணி நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடனிருந்தனர்

    Next Story
    ×