search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்
    X

    விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்

    • துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலபணி திட்டம் சார்பில் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டுதலின்படி "தூய்மை பணியில் இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கொங்கம்பட்டி கிராமத்தில் நடந்தது.

    முகாமில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்கூடாது. துணிபைகளை பயன்படுத்தி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். முகாமையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. 300 பேர் சிகிச்சை பெற்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம், இளையான்குடி, வட்டார மருத்துவர் அருண் அரவிந்த், வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகமது, வங்கி துணை மேலாளர் பாலமுருகன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினி தேவி, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் நாசர், இளையான்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் நோன்பரசன் மற்றும் ஆய்வுக்கூட பிரிவு ரஞ்சித் குமார், இளையான்குடி தாசில்தார் கோபி நாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிறைவு விழாவில் கொங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி சரண்யா பிரசாந்த், கண் மருத்துவர் ரிஷிகேஷ், செய்யது அபுதாஹிர், ஜனாப் முகம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்றி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பீர் முகமது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமாகனி செய்திருந்தனர்.

    Next Story
    ×