search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானாமதுரை, இளையான்குடியில் சுதந்திர தினவிழா
    X

     திருப்புவனம் அரசுமகளிர் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடிஏற்றினார்.

    மானாமதுரை, இளையான்குடியில் சுதந்திர தினவிழா

    • மானாமதுரை, இளையான்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • திருப்புவனம் அரசுமகளிர் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடிஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுந்தரபுரம் தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வைகைஆற்று பாலம் முன்பு உள்ள அரசு ஓய்வூதிய சங்கம் ஆகிய இடங்களில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கொடி ஏற்றினார்.

    நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற அலுவலகம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஆகிய இடங்களில் தேசிய கொடிஏற்றினார். வட்டாச்சியர் அலுவ லகத்தில் தாசில்தார் ராஜா, துணைகண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. கண்ணன் பாபாமெட்ரிக்கு லேசன் பள்ளியில் பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.

    திருப்புவனம் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசுமேல்நிலை பள்ளி, பழையூர் அரசு தொடக்க பள்ளி ஆகிய இடங்களில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றினார்.

    செயல் அலுவலர் ஜெயராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் நஜீமுதின் கொடிஏற்றினார்.

    செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், மேலநெட்டூர் சொர்ணவாரீசுவரர் சாந்தநாயகி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    Next Story
    ×