search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா
    X

    கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா

    • கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமானதாகும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இந்தக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமான தாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நாளை (25-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் வெள்ளி ரதமும், 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தினமும் மாலையில் ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சிகள், சிறப்புநாதசுவர கச்சேரிகள், பட்டிமன்றம் நடைபெறும்.வைகாசி விசாக விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×