search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொங்கேஸ்வரர்-ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சிவாச்சாரியார்கள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபோது எடுத்த படம். 

    கொங்கேஸ்வரர்-ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • கொங்கேஸ்வரர்-ஏழுமுக காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அய்யா "ஆ"சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகொங்கேஸ்வரர், ஸ்ரீ ஏழு முக காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 24-ந்தேதி காலை 8.30 மணிக்கு முதற்கால யாஜ பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை யும், 25-ந் தேதி 2-ம், 3-ம் கால யாக பூஜைகள், 26-ந் தேதி 4-ம், 5-ம் கால யாக பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6.35 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, கோ பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராத னையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்றது.



    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    கும்பாபிேஷகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சிவகங்கை, காளையார்கோவில் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலரும், செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாருமான சுப.குமரேசன், சாந்திகுமரேசன், அருண் மற்றும் கொங்கேஸ்வரர் கோவில் டிரஸ்டிகள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×