search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடை ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை
    X

    ரேசன் கடை ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை

    • ரேசன் கடை ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வருவதில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர், கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, ஆரம்ப சுகாதார மையம், கழிவு நீர் பாதை போன்றவற்றிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வராமல் இருப்பது குறித்து, அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதில் நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×