search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம்
    X

    ரெங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம்

    • தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மிகப் பழமையான ரெங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 140-வது பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிம்மம், ஹனுமாந்தம், கருடன், சேஷ, யானை, புஷ்பக விமானம், குதிரை, கன்றுக் குட்டி ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் ரெங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்தனர். இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பி வடம்பிடித்து இழுத்தனர். வழியில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இன்று புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் சேவையும், நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×