search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த கோவில்.

    கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

    • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
    • சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தேடி வருகிறார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .

    நேற்று இரவு கோவில் பூசாரிகள் வழக்கம் போல் கோவில் நடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் கொண்டு தப்பினர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×