search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளில் திரியும் கோவில் மாடுகள்
    X

    போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகளை படத்தில் காணலாம்.

    சாலைகளில் திரியும் கோவில் மாடுகள்

    • திருப்புவனம் பகுதியில் கோவில் மாடுகள் சாலைகளில் திரிகின்றன.
    • வாகனங்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மிக பெரிய பேரூராட்சி ஆகும். திருப்புவனத்தில் பஸ் நிலையம் இல்லாததால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பஸ்கள், மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு திருப்புவனம் வழியேதான் செல்கிறது. இதனால் காலைமுதல் இரவு வரை திருப்புவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். திருப்புவனம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி விடப்பட்ட ஏராளமான காளைமாடுகள் தற்போது சாலை பகுதியிலும், பொதுமக்கள் கூடும் பஸ்நிறுத்தம், பேரூராட்சி, போலீஸ் நிலையம், மத்தியகூட்டுறவு வங்கி, சார்பதிவாளர் அலுவலம் ஆகிய இடங்க ளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வலம்வருகிறது.

    சில சமயங்களில் மாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சாலைஓரங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை சேதபடுத்திவரும் நிலையும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பஸ் நிறுத்தத்தில் நிற்கும் வெளியூர் பயணிகள் மாடுகள் திடீரென்று ஓடும் போது பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். சிலமாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வரும் போது கூட்டமாக வரும் மாடுகள் முட்டி சாலையில் விழுந்து ஒருவர் இறந்து போனார்.

    மாடுகளை ஆட்களை வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்து மாடுபிடிக்க முயல்பவர்களை காளைமாடுகள் முட்டவருவதால் பிடிக்க முடியாமலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தினறிவருகின்றனர்.

    எனவே திருப்புவனம் பகுதியில் சுற்றி திரியும்கோவில் மாடுகளை கோசாலையில் அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×