என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா
- எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் சக்தி கணபதி, பொன்னழகி அம்மாள், வெற்றிவேல் முருகன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பொன்னழகி அம்மன் தோரணவாயில் குதிரை மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி, ஆராதனை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியில் தீபாராதனை நடத்தப்பட்டது. கடம் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி சாமியாடி, பூசாரி கருப்பசாமி, பூசாரி சின்ன காளை, மாயழகு, ஆறுமுகம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்