search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாட்டம்
    X

    காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாட்டம்

    • உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாடினர்.
    • ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என தீர்ப்பு வெளியானது.

    திருப்பத்தூர்

    ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்துநிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் பொருளாளர் பழனிவேல் ராஜன், மூத்த உறுப்பினர் பழனியப்பன், அழகப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிர்ஸ் தலைவர் சேதுமெய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×