search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    அரசு விதிகளுக்குட்பட்டு தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த பயனாளிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித், குழந்தையை வழங்கினார்.

    குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. இங்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் முதல் தத்தெடுப்பு கூட்டம் நடைபெற்று.

    அரசு விதிகளின்படி பதிவுபெற்ற ஒரு குடும்பத்தி னர்களில், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்த பெற்றோருக்கு, மாவட்ட கலெக்டரால் இக்கூட்டத்தின் வாயிலாக குழந்தை வழங்கப்பட்டது.

    மேலும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு வயது மற்றும் ஆவணங்களுடன், வளனார் தத்து வள மையம், மானகிரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன், வளனார் தத்து வள மைய நிர்வாகி, சகோதரி.மேரி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×