என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விநாயகர்- அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
- விநாயகர்- அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு கக்காட்டிருப்பு கலங்காத கண்ட விநாயகர், நயினப்ப விநாயகர், கலை உடைய அய்யனார் கோவில்கள் அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
கடந்த 18-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி யுடன் தொடங்கி 3 நாட்கள் யாகம் நடந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் 4-ம் கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று காலை 9.30 மணி அளவில் யாகசாலை பூர்ணகுதி நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கலங்காத கண்ட விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் நயினப்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து 11 மணியளவில் கலை உடைய அய்யனார் ேகாவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் யாக பூஜையில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் பங்கேற்றார், கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் பட்ட மங்கலம், பண்ணைதிருத்தி, திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டி, புதூர், வடமாவளி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா விற்கான ஏற்பாடுகளை கலங்காத கண்ட விநாயகர் நயினப்ப விநாயகர் கலை உடைய அய்யனார் கோவில் நிர்வாகிகள் கக்காட்டிருப்பு ஊரார்கள் இளைஞர்கள் மற்றும் தரியம்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். விழாவில் கக்காட்டிருப்பு, திருக்கோஷ்டியூர், எம்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்