search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை
    X

    தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

    • போக்குவரத்து விதி மீறிய தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தேவகோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத் தூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இந்தபகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பஸ் நிறுத் தங்களை போலீசார் சில மாற்றங்களை செய்தனர். மேலும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அவ்வப் போது அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக வரு வதாகவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவ தில்லை எனவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில் ராம்நகரில் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், ஏட்டு யோகராஜா ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×