search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் பெருமன்ற பயண குழுவுக்கு வரவேற்பு
    X

    இளைஞர் பெருமன்ற பயண குழுவுக்கு வரவேற்பு

    • அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    மானாமதுரை

    படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பிரசார பயண குழு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. மானாமதுரை வந்த இந்த குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த வரவேற்பு கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் திருச்செல்வம், தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணகி, ஒன்றியச் செயலாளர் சங்கையா ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×