search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் வழங்கினார்.

    42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளு க்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களும், 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் வழங்கினார்.

    இதில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×