search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
    • ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப் படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசா ரிக்கப்பட்டது.

    தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோ லைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.

    இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • 250 மனுக்கள் பெறப்பட்டது

    சிவகங்கை

    திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
    • தியாகியின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம் அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.

    தேவகோட்டை ஒன்றி யத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் அனைத்து கிராமங்க ளிலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயிகள் பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்ற னர். கடந்த சில ஆண்டுக ளாகவே பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    காரை வருவாய் உள்ள டங்கிய 14 கிராமங்களில் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் விவசாய பணி களை மேற்கொள்ளும்போது பயிர் காப்பீடு செய்து வரு கின்றனர். ஆனால் 4 ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்ததால் விளை நிலங்கள் வறண்டு காணப் பட்டது.

    மோட்டார் பாசன மூலம் ஓரிரு இடங்களில் விளைச் சல் ஏற்பட்டுள்ளது. அதி காரிகள் கணக்கில் கொண்டு அந்த பகுதி முழுவதும் விளைச்சல் அடைந்துள்ள தாக கணக்கீடு செய்ததால் காப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை கண்மாய் பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை கடன் மற்றும் விவசாய கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ லில் காப்பீடு தொகை கூட கிடைக்காததால் விவசாயி கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    பயிர் காப்பீடு செய்யும் பொழுது அரசு அந்நிறுவ னத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத கிராமங்க ளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர போராட்ட தியாகி யின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்துள்ளது.
    • மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு கேற்றாற் போல் வாகனப் பெருக்கமும் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேவ கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் முன்பும் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீஸ் நிலை யத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    தேவகோட்டையில் முக்கிய இடங்களான ஆண்டவர் செட், பேருந்து நிலையம், வங்கி, மருத்துவ மனை, வணிக வளாகங்க ளில் வருபவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வாச லில் வைத்து விட்டு செல் கின்றனர். வேலை முடித்து விட்டு வெளியே வந்து பார்க்கும்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மோட்டர் சைக்கிளை வெளியிட ங்களில் நிறுத்த அச்சமடை கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர் பாக தேவகோட்டை போலீ சுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், நகர் இன்ஸ்பெக்டர் சரவ ணன், சப் இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், நமச்சிவா யம் தலைமையிலான போலீ சார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக் கிளை திருடிச் செல்வது கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    காளையார்கோவில்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மழைநீர் சேகரிப்பு ெதாட்டி, 2 மரக்கன்றுகள் நட்டால்தான் வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்.
    • ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லல் அருகே சொக்கநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வரு பவர் கண்ணன். இவர் பத வியேற்ற மூன்றரை வருட காலத்தில் ஊராட்சிக்குட்பட்ட முத்தனங்கோட்டை, கத்தப் பட்டு, பைக்குடிபட்டி, புத்த டிபட்டி, முத்துப்பட்டினம், ஆலகுத்தான்பட்டி, கோவில் பட்டி, சொக்கநாதபுரம் உள் ளிட்ட பல்வேறு கிராமங்க ளில் சுமார் 50 ஏக்கர் பரப்ப ளவுக்கு தரிசு நிலமாக இருந்து வந்த வறண்ட பூமியை கிராம மக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் உதவியோடு அரசுக்கு வருவாயீட்டும் வகை யில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய சோலை யாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இவர் மேற்கொண்ட இந்த முயற்சியினால் சுமார் எட்டு இடங்களில் அரசுக்கு சொந்த மான தரிசு நிலங்களில் தற்ச மயம் முந்திரி, மா, பலா, நாவல், எலுமிச்சை போன்ற பலன் தரும் பழவகை மரக்கன் றுகளையும், ரோஜா, மல் லிகை, செம்பருத்தி, அழகு ராணி, ஸ்பீக்கர் பூ, டேபிள் ரோஜா, இட்லிப்பூ, உன்னிப்பூ போன்ற பலதரப்பட்ட பூ செடிகளையும் பதியம் (நர்சரி) செய்தும் பெங்களூரு, ஐதரா பாத் போன்ற பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கியும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.

    மேலும் இவரின் இத்தகைய விடாமுயற்சியை கண்டு மாவட்ட கலெக்டரும், திட்ட இயக்குனரும் நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டிய தோடு தொடர்ந்து இவரின் முயற்சிக்கு ஆக்கமும் ஊக்க மும் அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கூறுகையில், நான் மன்ற தலைவராக பொறுப்பேற்கும் போது இக்கிராமத்தைச் சுற்றி யுள்ள தரிசு நிலங்களில் புளிய மரக்கன்றுகள் மட்டும் நடவு செய்யப்பட்டு முறை யான பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்பட்டது. எனக்கு சிறுவயதில் இருந்து விவசாயத்தின் மீது அதீத நாட்டம் உண்டு. இதனால் எனது கிராமத்தை வறண்ட பகுதியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய எண்ணம் உருவா னது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கை யில் அவர்கள் மாவட்டத்தி லேயே என்னையும் என் கிராமத்தையும் மட்டும் தேர்வு செய்து வேளாண் பயிற்சி பெறுவதற்காக அண்டை மாநிலமான பெங்களூருக்கு இது குறித்த பயிற்சி பெற என்னை அனுப்பி வைத்தனர். அங்கு வறண்ட பூமியில் விவ சாயம் மேற்கொள்வது குறித் தும், நீர் மேலாண்மை குறித் தும் எனக்கு பயிற்சி அளிக்கப் பட்டது.

    இதற்கு ஊக்கம் அளித்தால் வருங்காலத்தில் சிவகங்கை மாவட்டமானது ஒரு செழிப்பு மிக்க விவசாய மண்டலமாக மாறுவதில் எந்த ஒரு ஆச்சரி யமும் இல்லை என்றார்.

    மேலும் என்னுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு தொட்டியும், இரண்டு மரக்கன்றுகளை யும் நட்டால் மட்டுமே மன்ற நிர்வாகத்தில் இருந்து அதற் கான அனுமதி வழங்கி வருகி றோம். தொடர்ந்து அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கையாக வருடம் முழுவதும் விவசாய மேற்கொள்ளவும், மரக்கன்று களை நட்டு பராமரிக்கவும் தங்களது கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வந்த வரத்து கால்வாயை மீண்டும் தூர்வாரி தருமாறு கிராம மக்க ளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

    • வட்டார திட்ட நிறைவு விழா நடந்தது.
    • செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் வட்டாரத்தில் கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை லட்சிய திட்ட இலக்கு வட்டார திட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, வேளாண்துறை, மகளிர்திட்டம் ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான நிறைவு நாள் விழா திருப்பத்தூரில் நடந்தது. ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.

    ஊராட்சிகளின் உதவி இயக்குனர்குமார் முன்னிலை வகித்தார். வடடார வளர்ச்சி அலுவலர் அருட்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திட்ட இயக்குனர் சிவராமன் கலந்துகொண்டு சிறப்பாக பணி புரிந்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பர்னபாஸ் அந்தோனி, வட்டாரக்கல்வி அலுவலர் குமார், மகளிர் உரிமைத்துறை தாரணி, வேளாண்துறை சார்பாக செந்தில்நாதன் கலந்து கொண்டனர்.

    • காய்கறி, உணவுக்கழிவு மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டது.
    • இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு விரைவில் தொடங்கபட இருக்கிறது.

    மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி யில்300-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. இதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள் பாதிக்கப்படு கின்றனர்.

    இதனை போக்க ஊராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவு களில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் சத்துணவு சமைக்கப் பட உள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக் கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும். இதை பயன்படுத்தி பள்ளிகளில் சத்துணவு சமைக்கலாம்.

    இதுகுறித்து ஊராட்சித் தலைவர் அன்பழகன் கூறுகையில், சத்துணவு சமைக்கும் போது கிடைக்கும் காய்கறி கழிவுகள், மாணவர்கள் சாப்பிட்ட பின்னர் கிடைக் கும் உணவுக்கழிவுகள், இதுதவிர சந்தைகளில், குப்பைகள் சேகரிக்கும் போது கிடைக்கும் காய்கறி, உணவு கழிவுகள் போன்றவை பயன்ப டுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்று கூறினார்.

    ×